search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஸ்வ இந்து பரிஷத்"

    அயோத்தியில் பிரச்சனைக்குரிய இடத்தை சுற்றி, வாங்கப்பட்ட 67 ஏக்கர் நிலத்தை உண்மையான உரிமையாளர்களிடம் திருப்பி அளிக்க அனுமதிக்கும்படி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. #SC #AyodhyaCase #AyodhyaDisputeSite
    புதுடெல்லி:

    அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடமான 2.77 ஏக்கர் நிலப்பகுதியைச் சுற்றியுள்ள 67 ஏக்கர் நிலத்தை உரிமையாளர்களிடம் இருந்து மத்திய அரசு கடந்த 1991-ம் ஆண்டு வாங்கியது. அயோத்தி நிலம் தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தைச் சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அஹாரா, ராம் லாலா ஆகிய 3 குழுக்கள் சமமாக பிரித்துக்கொள்ள உத்தரவிட்டது. ஆனால், இந்தத் தீர்ப்பை எதிர்த்து 14 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.  

    இந்த வழக்கு விசாரணை அரசியல் சாசன அமர்வில் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அரசியலமைப்பு அமர்வில் இடம்பெற்றுள்ள நீதிபதி பாப்தே வராததால் விசாரணை ரத்து செய்யப்பட்டது. எப்போது விசாரணை நடைபெறும் என்ற தகவலும் வெளியிடப்படவில்லை.

    இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இன்று மத்திய அரசு புதிதாக ஒரு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், “கடந்த 1991-ம் ஆண்டு, அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலப்பகுதியைச் சுற்றி 67 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு வாங்கி இருந்தது. அந்த நிலப்பகுதியை உண்மையான உரிமையாளர்களிடமே திருப்பி அளிக்க அனுமதிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.

    மத்திய அரசின் இந்த முடிவை விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) அமைப்பு வரவேற்றுள்ளது. இது குறித்து விஎச்பி அமைப்பின் சர்வதேச செயல் தலைவர் அலோக் குமார் கூறுகையில், "அயோத்தியில் அரசு வாங்கியுள்ள 67 ஏக்கர் நிலம் ராம் ஜென்மபூமி நயாஸ்க்கு உரிமையானது. அதில் எந்தவிதமான சட்டச்சிக்கலும் இல்லை. அதைத் திரும்ப ஒப்படைக்க அரசு முடிவு செய்திருப்பது சரியான நடவடிக்கை. அதனை நாங்கள் வரவேற்கிறோம்" எனத் தெரிவித்தார்.

    சர்ச்சைக்குரிய நிலத்தை தவிர, அதைச் சுற்றி உள்ள நிலத்தை விடுவிக்கப்பட்டால், அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #SC #AyodhyaCase #AyodhyaDisputeSite
    தீபாவளிக்கு வெடிக்கப்படும் பட்டாசுகளின் மீது சுற்றப்பட்டிருக்கும் சாமி படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என விஸ்வ இந்து பரிஷத் தலைவர் வலியுறுத்தியுள்ளார். #VHPleader #crackerswithgodphotos #SasikantSharma
    பெங்களூரு:

    காற்றுமாசு மற்றும் ஒலிமாசுவை குறைக்கும் வகையில் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்கும் நேரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இதன்படி, கர்நாடக மாநிலத்தில் இரவு 8 மணி முதல் 10 மணிவரை பட்டாசுகள் வெடிக்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

    இந்நிலையில், தீபாவளிக்கு வெடிக்கப்படும் பட்டாசுகளின் மீது சுற்றப்பட்டிருக்கும் சாமி படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் மூத்த தலைவர் சசிகாந்த் சர்மா வலியுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக பெங்களூரு நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பட்டாசுகளில் இருந்து வெடித்துச் சிதறிய காகித குப்பைகளில் தெய்வங்களின் படங்கள் இடம்பெற்றிருப்பது இந்து மதத்தின்மீது பக்தி வைத்திருக்கும் மக்களின் மன உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் அமைவதாக குறிப்பிட்டுள்ளார்.



    எனவே, இனி பட்டாசுகளின் மீது சாமி படங்களை ஒட்டி விற்கப்படுவதை அரசு தடை செய்ய வேண்டும்.இல்லாவிட்டால் இதற்காக நாங்கள் கோர்ட்டில் வழக்கு தொடரவும் தயாராக இருக்கிறோம்.

    ஏற்கனவே, சாமி படங்களுடன் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ள வெடிகளை பயன்படுத்துவதை பொதுமக்கள் தாங்களாவே முன்வந்து தவிர்க்க வேண்டும் எனவும் சசிகாந்த் சர்மா வலியுறுத்தியுள்ளார்.

    பஜ்ரங் தள், இந்து ஜக்ருதி சமிதி ஆகிய அமைப்புகளின் தலைவர்களும் இந்த கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
    #VHPleader #crackerswithgodphotos #SasikantSharma
    சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் தொடர்பான விசாரணையை ஜனவரி மாதத்துக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்த நிலையில் ராமர் கோயிலை கட்ட சட்டம் இயற்ற வேண்டும் என இந்து அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. #Ayodhyahearing #Ayodhyahearingdelay #newLegislativeroute
    புதுடெல்லி:

    அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி - பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கின் விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.

    இந்நிலையில்,  ராமர் கோவிலை கட்ட மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என இந்து அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

    இதுதொடர்பாக டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் மூத்த தலைவர் அருண் குமார், சுப்ரீம் கோர்ட் வேண்டும் என்றே இந்த மேல் முறையீட்டு வழக்கு விசாரணையை தாமதப்படுத்தி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

    ‘சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி திபக் மிஸ்ரா பதவி காலத்தின்போது, உடுப்பியில் கூடிய சாதுக்கள் மாநாட்டில் அயோத்தி தீர்ப்பு வரும்வரை காத்திருப்போம் என்று தீர்மானிக்கப்பட்டது. ஆனால், திபக் மிஸ்ரா ஓய்வுபெற்ற பின்னர் பதவி ஏற்றுள்ள தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயும் இவ்வழக்கின் விசாரணையை தற்போது ஒத்திவைத்துள்ளார்.

    மற்ற வழக்குகளில் பணி நேரம் முடிந்த பின்னரும், இரவு வேளைகளிலும் விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட்டுக்கு நேரம் இருக்கிறது. ஆனால், மிகப்பெரிய முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தி நிலம் தொடர்பான வழக்கின் விசாரணை தவிர்க்கப்படுகிறது.

    எனவே, சட்டரீதியாக அங்கு ராமர் கோவில் கட்டுவதற்கு சட்டம் இயற்றும் மாற்றுவழியை நாம் தேர்வு செய்தாக வேண்டியுள்ளது’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இதே கருத்தை விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் செயல் தலைவரான அலோக் குமாரும் வலியுறுத்தியுள்ளார்.

    கடந்த 7 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள இந்த வழக்கின் தீர்ப்புக்காக ஆயுள்காலம் வரை காத்திருக்க முடியாது. எனவே, எதிர்வரும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின்போது ராமர் பிறந்த பூமியில் மிக சிறப்பான முறையில் அவருக்கு கோவில் கட்டுவதற்காக சட்டம் இயற்றப்பட வேண்டும் என அலோக் குமார் தெரிவித்துள்ளார்.


    இதேபோல், சுப்ரீம் கோர்ட்டின் தாமதத்துக்கு மத்திய இணை மந்திரி கிரிராஜ் சிங் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

    அயோத்தி விவகாரத்தை இந்து -முஸ்லிம்கள் இடையிலான பிரச்சனையாக்க காங்கிரஸ் கட்சி தீர்மானித்துள்ளதாக குற்றம்சாட்டிய கிரிராஜ் சிங், ஸ்ரீராமர் இந்துக்கள் மத நம்பிக்கையின் அடையாளம். சுப்ரீம் கோர்ட்டின் தாமதத்தால் இந்துக்கள் பொறுமையை இழந்து வருகின்றனர். அவர்கள் பொறுமை எல்லைமீறி போகும்போது என்ன ஆகுமோ? என்ற அச்சஉணர்வு எனக்கு ஏற்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.  #Ayodhyahearing  #Ayodhyahearingdelay #newLegislativeroute
    ×